Sunday, August 28, 2011

மலர்க்கவிதைகள்

மலர்க்கவிதைகள்


என் குளிர்காலக் கனவுகள்
மறைகின்றன
நிகழ்கால நிஜங்களில்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறு இடைவெளிகளில் உன்னை
காண்கிறேன்.
உன் இருகண்களில்
என்னை இழுக்கிறாய்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் மலர்முகம் என்னை
மாற்றுகின்றன
என்னையறியாமல்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்க்கையில்
தெரியாத கவிதைகள்
உன்னை நினைக்கையில்
வருகின்றன
என் மனமறியாமல்...
Enhanced by Zemanta

பிப்ரவரி மாதக்கவிதைகள்

பிப்ரவரி மாதக்கவிதைகள்


அந்த நாள்
அதிசயம் அவள்...


சப்தம் இல்லாமல்
சந்தங்கள் இல்லை
உன் புன்னகை இல்லாமல்
நீ இல்லை.



கவனங்கள் சிதறுகின்றன
நீ பார்க்காத பார்வையால்..
எனது பாடங்கள் படமாகின்றன
உன் திகட்டாத சிரிப்பால்...

உன்னுள் வாங்கும் ஒளியை
நானே வெளியிடுகிறேன்
நடுநிசியில் உன்னைத் தேட..

உன்னை பார்த்ததில்
நான் பூவுலகில்
பார்க்க மறந்த நிகழ்வுகள் பல..
Enhanced by Zemanta

கவிதைகளில்

கவிதைகளில்

விட்டு விட்டு பெய்த மழையில்
என் நெஞ்சை தொட்டு விட்டு
சென்று விட்டாள்..


என்
கவிதைகளில்
நான் நீ மட்டும்..
எப்பொழுது நாம் ஆவோம்
நம்
கவிதைகளில்..


காதலிக்கத்தான் நினைக்கிறேன்
உன் மறைவில்
விரும்புகிறேன் என்றேன்
என் கனவுலகில்..

கார்கால மேகக்கூட்டங்கள்
வானில் வான்வில்லாக...
என்னில் பெய்யென பெய்யும்
மழையாக நீ...


என்னில் காதல் கவிதையில்!!
சப்தமில்லா உலகில் என் காதல்
கனவுகளாக..

கவிதையில் என்னில்
பல மாற்றங்களாக நீ!!
நேரில் பார்க்கமுடியாத கனவுகளாக..
Enhanced by Zemanta

பூந்தோட்டம்

பூந்தோட்டம்


பூந்தோட்டங்களிலுள்ள ஆயிராமாயிரம்
பூக்களில் நீ மட்டும் தனியே..
நான் தினமும் உன்னை தேடும்
பட்டாம்பூச்சியாக..



பின்பனிக்கால பனித்துளிகள்

மண்ணில் மறைகின்றன..
நீயும் அறைநிலாவாக தேய்ந்து
உலகை வலம் வந்து
மீண்டும் வளர்கிறாய் என்னில்..



பனிக்கால முகில்கள்
என்னை சுற்றுகின்றன
உன்னை மறைத்து..
இலைகளில் பனித்துளிகள்
சிதறி..
உன்னை காண்கிறேன்
Enhanced by Zemanta

ஆயுதம்



ஆயுதம்:-











ஆயுதம் வாங்கிற பணத்தின் பகுதியை பிரித்து விவசாயம் செய்ய மக்களுக்கு உதவினால்
நம் நாடு உணவு உற்பத்தியில் உலகில் முதன்மை பெற்று நாம்
அண்டை நாடுகளுக்கும் சாப்பாடு போடலம்.(- தம்பி)


ஊழல் எங்கு ஆரம்பிக்கிறது என்று யோசித்ததில்
சுயநலம் என்றதில் தொடங்கி..
இடுகாடு செல்லும் தருவாய் வரை...
Enhanced by Zemanta